ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தின் அச்சுதாபுரம் சிறப்புப் பொருளாதார மண்ட லத்தில் உள்ள எசி யன்ஷியா (Escien tia) மருந்து நிறுவ னத்தில் பாய்லரில் வெடி விபத்து ஏற் பட்டுள்ளது. இந்த கோர வெடி விபத் தில் சிக்கி 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 15 பேர் காய மடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அம் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடியும், படுகாயமடைந்த குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சமும் நிதியுதவி அறிவித்துள்ளார்.